
சில நாட்களுக்கு முன் ஒரு கோவிலுக்கு சென்றிருந்தேன்.அங்கே கழிப்பறையில் 10 வயது மதிக்கதக்க ஒரு சிறுமி கழிப்பறையை சுத்தம் செய்வதை கண்டேன். பெயர் என்ன என்றேன்? சுமதி என்றாள்.எவ்வளவு தருவார்கள் என்றேன்? 2 அல்லது 3 ரூபாய் என்றாள். எனக்கு என்ன செய்வது, அந்த பெண்ணிடம் என்ன சொல்லுவது ஒன்றுமே புரியவில்லை. பையில் இருந்தா 50 ரூபாயை கொடுத்தேன் முதலில் மறுத்தாள் பிறகு வாங்கிகொண்டாள்.
அன்று முழுவதும் எனக்கு அந்த சிறுமியின் முகமே மனதில் நிலழாடியது. அந்த சிறுமிக்கு என்னால் வேறு என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. 2 ரூபாய்கு சிறுமியை வேலைக்கு அனுப்பினால்,அந்த குடும்பத்தின் நிலை தான் என்ன? ”குழந்தை தொழிலாளர் ஒழிப்பு” என்பன திட்டங்களாகவே உள்ளன.
இதே போல் என் தோழியின் உறவினர் வீட்டில் கடை வைத்து உள்ளனர்.கோடை விடுமுறைகளில்அவர்கள் கடைக்கு சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவராம். கொலுத்தும் வெயிலில் பெறியவர்கள்வேலை செய்வதே கடினம். சிறுவர் என்றால் நினைகவே முடியவில்லை. இப்படி பல இடங்களில் சிறுவர்,சிறுமியர் வேலைக்கு நிறுத்தபட்டே உள்ளானர். கண்முன்னே தெரிவது மிக மிக குறைந்த அளவே.

இதில் ஒரு புறம் மட்டுமே நாம் பார்க்கிறோம். கோடை காலத்தில் வேலை செய்யும் ஒரு பையனிடம் “ஏன் வேலை செய்கிறாய்?” என கேட்ட போது ஜூன் மாதம் புக் வாங்க, புது யுனிபாம் வாங்க காசு வேண்டாமா அக்கா? என்று கேட்ட போது என்னிடம் பதில் இல்லை. சில சிறுவர் சிறுமியர் விரும்பியேவேலைக்கு செல்கின்றனர்.
என் பக்கத்து வீட்டு வேலுவின் அம்மாவிடம் உங்க பையன் படிப்பு செலவு முழுவதும் என் பொறுப்பு என்றாராம். அதற்கு அந்த அம்மா என் அம்மாவிடம் ”ஸ்கூலுக்கு போனா வயத்தால போகுது டீச்சர்” என்று சொன்னாராம். அந்த பையனுக்கு இப்போழுது 15 வயது இருக்கும் ஆனால் அவன் செல்போன் பயன்படுத்துவதை நேற்றுதான் பார்த்தேன், ஆச்சர்யம் என்ன வென்றால் அவர்களின் குடிசை வீட்டை கல் வீடாக மற்ற அவன் தான் பணம் கொடுத்தானாம்.
ஒவ்வொரு குழந்தை தொழிலாளியின் பின்னும் ஒரு கதை உள்ளது. நம் கண் முன்னே காணும் குழந்தை தொழிலாளர்களுக்கு நம்மால் ஆன உதவியை செய்வோம். குழந்தை தொழிலாளர்கள் என்பது கெமிக்கல் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் மட்டும் அல்ல, நம் கண் முன்னே பூ விற்கும் சிறுமியும், பாத்திரம் தேய்க்கும் சிறுமியும் குழந்தை தொழிலாளர்கள் என்பதை உணர மறுக்கிறோம். என்று நம் நாடு தன்னிறைவு அடைகிறதோ அன்றே தான் இந்த கொடுமையை முற்றிலும் ஒழிக்க முடியும். நம்மால் அவர்களின் கண்ணீரை துடைக்க முடியாவிட்டலும் அவர்கள் முகத்தில் சிறு புன்னகையை அரும்ப செய்யலாம்.
