நினைவுகள் கூட தீர்ந்துவிட்டன
கனவுகள் கான நினைதேன்
பாலைவனங்களே வந்தன...
நனவுகள் தப்பி, கண்ணீர்
இதழ்களை எரித்த போது
சோகங்கள் பாறைகளாய்
மனதை அழுத்தியது
கால் தடுக்கிய போது
தாங்கிய சுவர்களிடம்
சொன்னேன் 'நன்றி' என்று
நான்கும் கூட்டமாய்
என்னை பார்த்து சிரித்தன
என் வீட்டு கண்ணாடிக்கு
கொஞ்சம் கோபம் தான்
என்னை மட்டுமே
பார்க்கவேண்டியுள்ளதே
T.V யும் ரேடியோவும்-என்
வீட்டு தோட்டமும்,என்
தனிமையில் பங்கு எடுக்கும்
அன்பு தோழிகள்
தோட்டத்து ரோஜாவை
அன்பளிப்பாய் கொடுக்க
முகங்களை தேடினேன்,மறைந்த
பாட்டிக்கு கொடுத்தேன்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment