படம் ரிலீஸ்சாகும் போது இது ’ஒரு வித்யாசமான படம்’ என்று பேட்டி கொடுப்பாங்க. ஆனா அதர பழச இருக்கும்.அந்த விஷயத்தில் இவங்க பொய் சொல்லவில்லை.
இந்த படத்தை பற்றி பேட்டி கொடுக்கும் போது இது பேங்க் திருட்டு பற்றிய படம் என்று எல்லோரும் சொன்னார்கள், 10 நிமிடம் வர சீன்க்கு இவ்வளவு பில்-டப்பானு நினைத்தேன்.
ஆனா படம் முழுவதுமே பேங்க் திருட்டு பத்தி தான்.
பேங்கை கொள்ளை அடிக்க விரும்பும் சிபி, அந்த பேங்கில் வேலை பார்க்கும் மற்றும் அந்த பேங்கின் ”சேப்டி லாக்கரை” உருவாக்கும் பிரசன்னாவை திருட்டுக்கு பயன்படுத்துகிறார்.
டெக்னாலஜியுடன் டெக்னிக்கலாக கதை சொல்லி இருகிறார்.
படத்தின் பிண்ணனி இசை சிறப்பாக இருந்தது. படத்தோட பல விஷயங்களை நம்மால் யூகிக்க முடிந்தாலும், படத்தை நன்றாகவே நகர்த்தி கொண்டுபோயிருக்கிறார்கள்.
பிரசன்னா நல்ல நடிகர், அதை சரியாகவே செய்திருக்கிறார். சிபிராஜ்க்கு ஆ............ஊ என கத்தாத வில்லன் ரோல். அதுவே எனக்கு
பெரிய ஆறுதலாய் இருந்தது. அசட்டையான ரோலை அலட்டலாக செய்திருக்கிறார். அவரோட குரல் இந்த படத்துக்கு நல்லாவே பொருந்துகிறது.
பேங்க் திருட்டு பத்தி டெக்னிக்கலா இவ்ளோ ஆழமாக சொல்லி மிரட்டி இருக்கிற இயக்குனர், பிரசன்னாவை மிரட்ட வேற ஏதாவது யோசித்திருக்கலாம்.
பிரசன்னா அடிக்கடி நான் பெரிய அறிவாளினு சொல்கிறார். அவ்ளோ அறிவாளியாக இருக்கிறவர் கிளைமாக்ஸ்ல ‘இங்க என்ன நடக்குது’ என்று கேட்கவேண்டிய அவசியம் இல்லை.
ரம்யாக்கு அவங்க தம்பி மேல பாசம்னு சொல்றாங்க, அதை கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.
படத்தில் நிறைய ட்விஸ்டு இருக்கிற மாதிரி கொண்டுபோறாங்க, அதை சுலபமா நாமளே கண்டுபிடித்துவிட முடிகிறது.
ரம்யா கூட பிரசன்னாக்கு கலா மாஸ்டர் சொல்ற கெமிஸ்டிரி ஒர்க் ஆகவில்லை. லேசர் பீம்கு நடுவில் ரம்யா போகிற மாதிரி ஒரு சீன் வரும், ரம்யா நல்லா தான் செய்றாங்க.ஆனால் ஏதோ மிஸ் ஆகிற மாதிரி இருந்தது.
கதையில் சில பல ஒட்டைகள் இருந்தாலும். படம் நல்லாவே வந்திருக்கிறது. இதுவே என் முதல் விமர்சனம் தவறு இருந்தால் மன்னிக்கவும். எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கிறேன்.
Thursday, January 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment